சென்னை அருகே ரூ.3.40 கோடி பறிமுதல்...

சென்னை அருகே இரண்டு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சுமார் 3 கோடியே 40 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-04-09 07:46 GMT
நொளம்பூர் பகுதியில், உரிய ஆவணங்கள் இல்லாமல், ஏடிஎம்முக்கு கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 75 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல, மதுரவாயலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 65 லட்ச ரூபாயை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணம், தனியார் பால் கம்பெனிக்கு சொந்தமானது என்றும், ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்