132 மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது - அண்ணா பல்கலைகழகம்

2017-18 ஆம் கல்வியாண்டில் நடந்த பருவத்தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது

Update: 2019-04-04 07:32 GMT
2017-18 ஆம் கல்வியாண்டில் நடந்த பருவத்தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என அறிவித்துள்ள அண்ணா பல்கலைக் கழகம் அவர்களின் பட்டங்களை ரத்து செய்துள்ளது. விசாரணைக்குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய மாணவர்கள் அனைவரும் பழைய மாணவர்கள் என்பதால், அவர்கள் மீண்டும் அரியர்ஸ் எழுதி சில நிபந்தனைகளையும்  பல்கலைக் கழக நிர்வாகம்   விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ் பணியில் தொடர தடை விதித்துள்ள அண்ணா பல்கலைக் கழகம், அவருக்கு எந்த கல்லூரியிலும் பணி வழங்கக் கூடாது என அறிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்