சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இருக்கும் கொடிக்கம்பம் - அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகள் காங்கிரஸ் எதிர்ப்பு

பழமையான கொடி கம்பத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-03 20:26 GMT
 அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் திருவொற்றியூர் பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருவெற்றியூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே நிறுவப்பட்ட கொடிக் கம்பத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த  காங்கிரஸ் கட்சியினர்,  அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கொடி கம்பங்களை அகற்றவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், பழமையான கொடிக் கம்பத்தை அகற்றக்கூடாது என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்