தாய்லாந்தில் இருந்து உயிரினங்கள் கடத்தல் - விமான நிலையத்தில் பரபரப்பு

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணியிடம், கொடிய விஷமுள்ள பாம்பு மற்றும் எகிப்திய ஆமைகள் உள்ளிட்ட 34 வகையான உயிரினங்களை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-26 05:29 GMT
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணியிடம், கொடிய விஷமுள்ள பாம்பு மற்றும் எகிப்திய ஆமைகள் உள்ளிட்ட 34 வகையான உயிரினங்களை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முகமது அப்துல் மஜித் என்ற அந்த பயணியின் உடமைகளை சோதனை செய்த போது, இந்த உயிரினங்களை அவர், பெட்டிகளில் அடைத்து, கடத்தி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள், யாருக்காக அவை கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்