திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Update: 2019-03-22 01:35 GMT
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அந்தத் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லாது எனக் கூறி, திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்திருந்தார். இதனிடையே, எம்.எல்.ஏ. போஸ் இறந்துவிட்டார். தொகுதி காலியான நிலையில், தற்போது வழக்கை காரணம் காட்டி இடைத் தேர்தல் அறிவிக்கவில்லை.  
Tags:    

மேலும் செய்திகள்