மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை : 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-03-17 03:10 GMT
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த சில நாட்களாக உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. சிறுமி கர்ப்பமாக இருப்பதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் சகோதரி உமா, சேத்தியாத்தோப்பு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த, முதியவர் தாடி ராமலிங்கம், பாலு, விநாயகம், வேல்முருகன், வீராசாமி ஆகிய 5 பேர் சிறுமியை வெவ்வேறு காலக்கட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்