சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5வது நாளாக நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சி களைகட்டியது.

Update: 2019-03-09 02:02 GMT
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5வது நாளாக நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சி களைகட்டியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு தீட்சிதர்கள் ஏற்பாட்டில், பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தொடங்கி வைத்து ஆடினார். பரதம், நாட்டிய நாடகம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட 80 வகையான நிகழ்வுகளில் 600-க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று அசத்தினர். பக்தர்கள், உள்ளூர்வாசிகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளை சேர்ந்த பலரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்