அ.ம.மு.க பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு :வீடு புகுந்து வெட்டியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை தாம்பரம் அருகே அமமுக பிரமுகர் மற்றும் அவரது மனைவி அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-03-08 14:08 GMT
தாம்பரம் பழைய ஸ்டேட் பாங்க் காலனியை சேர்நத நாகராஜ் என்பவர் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வட்ட செயலாளராக இருக்கும் அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதத்தின் முடிவில், தாங்கள் வைத்திருந்த அரிவாள் கொண்டு நாகராஜை தலை மற்றும் கையில் வெட்டினர்.இதனை தடுக்க முயன்ற அவரது மனைவியையும் அரிவாளால் தாக்கினர்.ரத்த காயங்களுடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த தம்பதியரை கண்டதும் அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்டதை கண்டு,மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.மருத்துவமனையில் நாகராஜ் மற்றும் அவரது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்