தமிழக மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 6 படகுகள் : அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்களிடம் சிறைபிடிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 மீன்பிடி படகுகளை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-05 19:44 GMT
தமிழக மீனவர்களிடம் சிறைபிடிக்கப்பட்ட பல லட்சம்  ரூபாய் மதிப்புள்ள 6 மீன்பிடி படகுகளை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்கின்றனர். கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தொடர்பான வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது படகுகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால்,  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆறு மீன் பிடி படகுகளை அரசு உடமையாக்க  நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட படகு உரிமையாளுர்களும் , தமிழக மீனவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்