காரைக்குடி : கணவன், மனைவியை அரிவாளால் வெட்டிய கும்பல்

காரைக்குடியில் நிலத்தை வாங்கி விற்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் கணவன், மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-03-02 11:55 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரில் வசித்து வரும் ஆரோக்கியசாமி நிலத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் கண்ணன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோருக்கு நிலத்தை விற்பனை செய்ததில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டுக்கு வெளியே இருந்த ஆரோக்கியசாமி மற்றும் அவரது மனைவி விக்டோரியா ராணியை காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்