சேலம் மாவட்டம் கொத்தம்பட்டியில் 3-வது மனைவி தலையில் மண்வெட்டியால் அடித்து கொன்ற கணவன் தலைமறைவாகியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் சுமதியை பார்த்த பிள்ளைகள், போலீஸ் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தலைமறைவாக உள்ள சுமதியின் கணவர் சிங்காரத்தை தேடி வருகின்றனர்.