திருமண நிகழ்ச்சியில் செல்பி கூட்டத்தில் சிக்கிய அன்புமணி
பா.ம.க பிரமுகர் முனிராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அன்புமணி, முதலில் மணமகன் மற்றும் மணப்பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
ஒசூரில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணியுடன் செல்பி எடுப்பதற்காக, திருமண விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ம.க பிரமுகர் முனிராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அன்புமணி, முதலில் மணமகன் மற்றும் மணப்பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து திருமணத்திற்கு வந்த ஒவ்வொருவராக அவருடன் செல்பி எடுப்பதற்கு முண்டி அடித்தனர். இதனால், திருமண விழாவில் சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது.