மணல் கொள்ளையை தடுத்த காவலர் கொலை வழக்கு : 6 பேர் கைது - வழக்கு விசாரணை முடிவடைந்தது

நெல்லை மாவட்டம் கீழசிந்தாமணி பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை, தாமரைக்குளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்து கொல்லப்பட்டார்.

Update: 2019-02-19 21:02 GMT
நெல்லை மாவட்டம் கீழசிந்தாமணி பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை, தாமரைக்குளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மாவட்ட  கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முருப்பெருமாள் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்