முதல்வருடன் "தினத்தந்தி " நிர்வாக இயக்குனர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.

Update: 2019-02-16 18:13 GMT
சென்னை கிரீன்வேஸ்சாலை உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, "தினத்தந்தி"  குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பூங்கொத்து கொடுத்தார். "தமிழர் தந்தை" மறைந்த சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என  அண்மையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் நன்றி தெரிவித்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்