சுற்றுலா தளமாக மாறியது மெட்ரோ ரயில் நிலையம்

மெட்ரோ ரயில் சேவை தொடர்பான விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்த, கடந்த நான்கு நாட்களாக இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Update: 2019-02-13 21:46 GMT
மெட்ரோ ரயில் சேவை தொடர்பான விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்த, கடந்த நான்கு நாட்களாக இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வழக்கத்தைவிட அதிகளவில் பொது மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தவாறே, விமானங்கள் ஏறி, இறங்குவ​தை பார்த்து மகிழ்ந்தனர். கட்டணம் இல்லாததால், பலதரப்பட்ட மக்களும் சென்னை விமான நிலையத்தை பார்க்க, மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்ததால், அந்த இடம் தற்காலிக சுற்றுலா மையமாக காட்சியளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்