சாலையில் வீசப்பட்ட இலவச மருத்துவ காப்பீடு அட்டைகள்

தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் நடுத்தெருவில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-02-10 19:49 GMT
திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதியில் தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் நடுத்தெருவில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், மூலம் பல நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். இத்திட்டத்திற்கான அட்டைகள், அங்குள்ள பெரிய தெருவில் வீசப்பட்டது குறித்து தகவலறிந்த அதிகாரிகள், உடனடியாக வந்து எடுத்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்