நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்திய ஆற்குட்டி எம்.எல்.ஏ

கோவை மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பாலமலையில் அரங்கநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

Update: 2019-02-10 19:31 GMT
கோவை மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பாலமலையில் அரங்கநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதற்காக பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவர் கோபுரம், அம்மன் கோபுரம், ராஜ கோபுரங்களில் உள்ள விமான கலசங்களில் ஊற்றப்பட்டது. அதனைதொடர்ந்து பெருமாள் மற்றும் அம்மன் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், அபிசேக பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, நடன குழுவினருடன் நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்