புதிய முறையால் டி.வி. சேவை கட்டணம் உயர்வு - டி.டி.எச். நிறுவனங்களுக்கு டிராய் புது உத்தரவு

விருப்பமான சேனலை வாடிக்கையாளர்களே தேர்ந்து எடுக்கும் புதிய முறையால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2019-02-10 05:08 GMT
விருப்பமான சேனலை வாடிக்கையாளர்களே தேர்ந்து எடுக்கும் புதிய முறையால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை முறைப்படுத்தும் வகையில், தகவல் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேல் டி.வி. கேபிள் இணைப்பு இருந்தால், NCF எனப்படும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டி.டி.எச். நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கட்டண சுமையை குறைக்க நிறுவனங்கள் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்