மனைவி விஷம் அருந்தியதால் போக்குவரத்து காவலர் தற்கொலை முயற்சி

ஈரோட்டில் கடன் தொல்லையால் போக்குவரத்து காவலர் ஒருவர், மனைவியுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-02-09 02:13 GMT
ஈரோட்டில் கடன் தொல்லையால் போக்குவரத்து காவலர் ஒருவர், மனைவியுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு வடக்கு போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த பூமலை, குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனைவி கலைச்செல்வி விஷம் அருந்தி மயங்கினார். இதனை கண்ட பூமலையும் விஷம் அருந்தினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்