ஹைதராபாத்தில் மூளைச் சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோவை வருகை...

ஹைதிராபாத்தில் மூளை சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோவை வந்தடைந்தது.

Update: 2019-02-07 20:27 GMT
ஹைதிராபாத்தில் மூளை சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோவை வந்தடைந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிநயா என்ற 14 வயது சிறுமி  அங்குள்ள யசோதா மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார்.  இதனையடுத்து இவரது நுரையீரல் தானமாக பெறப்பட்டு விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டு அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மும்பையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவருக்கு தானமாக கொடுக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்