முன்விரோதம் காரணமாக கொலை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மதுரையில் கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக மன்னர் மைதீன் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக இப்ராஹீம், ரபிக், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் மீது கடந்த 2014ஆம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2019-02-06 14:23 GMT
மதுரையில் கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக மன்னர் மைதீன் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக இப்ராஹீம், ரபிக், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் மீது கடந்த 2014ஆம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும்  5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்