மாற்றுத் திறனாளி வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் : சாலை பாதுகாப்பு வார விழாவில் வித்தியாச பிரசாரம்

கடலூர் மாவட்டம் வடலூரில் மூன்று சக்கர வாகனங்கள் ஓட்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-06 12:53 GMT
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் வடலூரில்  3 சக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு காவல்துறையினர் இலவச ஹெல்மெட்டை வழங்கினர். புதிய ஹெல்மெட் அணிந்த மாற்றுத் திறனாளிகள்,  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்க நகரின் பல்வேறு பகுதிகளிலும் மூன்று சக்கர வாகனத்தில் வலம் வந்தனர்.  இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுளளது.
Tags:    

மேலும் செய்திகள்