அனைத்து பொதுநல வழக்குகளிலும் தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அனைத்து பொதுநல வழக்குகளிலும் அரசு தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2019-02-05 22:20 GMT
அனைத்து பொதுநல வழக்குகளிலும் அரசு தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  நெல்லையை சேர்ந்த செல்வின் ஜோயல் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு,  பொதுநல வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றமே, தாமாக முன்வந்து தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்து கொள்ளும் என்றும் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்