கண்மாய் கரையில் நத்தை கொத்தி நாரைகள் வருகை அதிகரிப்பு...
அரியவகை பறவைகளை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள விநாயகாபுரம் பகுதி கண்மாய் கரையில்,அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலூர் பகுதியில் உள்ள குளம் மற்றும் நீர்நிலைகளில் தற்போது தண்ணீர் இருக்கும் நிலையில், ஆசிய கண்டத்தில் அரிதாக காணப்படும் நத்தை கொத்தி நாரைகள் இங்கு வருகை தந்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நத்தைகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும் அந்த பறவைகளை ஏராளமானோர் தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.