கல்லூரி உணவகத்தில் சாப்பிட்ட 4 மாணவிகள் மயக்கம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் உணவருந்திய மாணவிகள் 4 பேர் மயங்கி விழுந்துள்ளனர்.

Update: 2019-02-04 21:43 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் இன்று காலை உணவருந்திய ஆய்வக தொழில் நுட்ப பிரிவு மாணவிகள்  நான்கு பேர் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் உட்கொண்ட உணவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்