மரக்கன்றுகளை நட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அறிவியலில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு பள்ளிக்கல்வி துறை சார்பாக 10 நாள் கல்வி சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2019-01-31 03:21 GMT
தமிழகத்தில் அறிவியலில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு பள்ளிக்கல்வி துறை சார்பாக 10 நாள் கல்வி சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டனர்.  சென்னை திரும்பிய அந்த மாணவர்களுடன், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடி பரிசு வழங்கினார். மரக் கன்றுகளை நட்டால் மாணவ-மாணவிகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வெளிநாடுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,  என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்