சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் : 15 சிறுமிகள் மீட்பு - காப்பக உரிமையாளர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காப்பகத்தின் உரிமையாளர் வினோத் மற்றும் பணியில் இருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்கிருந்த கனிணி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் காப்பகத்தில் இருந்த 15 சிறுமிகளும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர். வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடமும், மற்ற ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்