வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா - அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்

தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்.

Update: 2019-01-30 05:51 GMT
கல்வி சுற்றுப்பயணத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 மாணவிகள், 37 மாணவர்கள் என மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு 10 நாட்கள் கல்விச் சுற்று பயணம் சென்றிருந்த அவர்கள், சென்னை திரும்பினர்.  அங்குள்ள கல்வி கற்பிக்கும் முறையை தெரிந்து கொண்டதாக குறிப்பிட்ட மாணவ, மாணவிகள், இதற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்து கொடுத்த தமிழக அரசிற்கும், கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்