சமயபுரம் வங்கி கொள்ளை : வங்கி லாக்கரை காலி செய்த 320 வாடிக்கையாளர்கள்

வங்கி கொள்ளை சம்பவத்தில், 510 சவரன் நகை மற்றும் 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது, தெரிய வந்துள்ளது.

Update: 2019-01-30 05:15 GMT
வங்கி கொள்ளை சம்பவத்தில், 510 சவரன் நகை மற்றும் 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது, தெரிய வந்துள்ளது. சமயபுரத்தில் உள்ள ஒரு வங்கியில், 4 லாக்கரில் இருந்து மட்டும், 510 சவரன் - 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது. வங்கி கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், 320 வாடிக்கையாளர்கள், தங்களது லாக்கர்களை காலி செய்து விட்டனர். சி.சி.டி.வி. பதிவுகளை, கொள்ளையர் எடுத்து சென்று விட்டதால், குற்றவாளிகள் குறித்து போலீசுக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை நடத்தி வரும் 5 தனிப்படை போலீசார், வங்கி கொள்ளையர்களை பிடிக்க, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்