நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என சம்மந்தப்பட்டவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-29 19:08 GMT
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என சம்மந்தப்பட்டவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கடந்த 2017ம் ஆண்டு சி.ஏ.ஜி. அளித்த வழிகாட்டுதல் படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு விரிவான உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 13 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்