திசைகாட்டும் கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டம்

சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

Update: 2019-01-29 07:58 GMT
கஜா புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில், திசை காட்டும் கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயல் பாதித்த தங்களது பகுதியில் மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் அவர்கள் குற்றம்சாட்டினர். மீனவர்களை தரையிறக்கும் முயற்சியில் வேதாரண்யம் போலீசார், மீன்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்