பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்த விவகாரம் : கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

சென்னையில் வியாசர்பாடியில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக, பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த‌ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-01-23 05:27 GMT
சென்னையில் வியாசர்பாடியில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக, பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த‌ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட் கிழமையன்று, நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன் அடிப்படையில், விசாரித்துவந்த எம்.கே.பி.நகர் போலீசார், 6 மாணவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் அம்பேத்கார் கலை கல்லூரி மாணவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்