மரத்தின் மீது கார் மோதி விபத்து : 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொண்டரசம்பாளையத்தில், மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2019-01-17 05:25 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொண்டரசம்பாளையத்தில், மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாராபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் உடுமலைக்கு சென்று கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் கொண்டரசம்பாளையம் அருகே, சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் முத்துசாமியின் மனைவி, மாமனார் மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த முத்துசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்