எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா மணிமண்டபம் : ஆணையர் ஆய்வு

எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா மணிமண்டபம் : ஆணையர் ஆய்வு

Update: 2019-01-14 11:51 GMT
சேலத்தில் துரிதமாக அமைக்கப்பட்டுவரும் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அங்குள்ள அண்ணா பூங்கா அருகே 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் மணிமண்டபத்தை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் சதீஷ், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த மணிமண்டபத்தை நாளை மறுநாள், முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். அப்போது,138 கோடி ரூபாய் அளவிலான திட்டப் பணிகளையும் அவர் துவக்கி வைப்பார் என  கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்