ஜனவரி 17ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் முன்பதிவு தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது

Update: 2019-01-12 06:06 GMT
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான வீரர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து வருகின்றனர். உடல் எடை, உயரம், முழு பரிசோதனையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் அனுமதி டோக்கன் வழங்கப்படுகிறது. வீரர்களை பரிசோதனை செய்ய ஐந்து மருத்துவ குழுக்கள் மற்றும் 8 வருவாய்த்துறை குழுக்கள் பணியில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்