போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல்

நாகை மாவட்டம் குத்தாலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வந்த அகில உலக திறந்தவெளி மாற்று மருத்துவ பல்கலைக்கழகம் என்ற போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-01-10 14:19 GMT
நாகை மாவட்டம் குத்தாலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வந்த அகில உலக திறந்தவெளி மாற்று மருத்துவ பல்கலைக்கழகம் என்ற போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ்கள் வழங்கியுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஏராளமான போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மருத்துவ துறை உயரதிகாரிகள், போலி பல்கலைக் கழகத்தை நடத்தி வந்த திருவேள்விக்குடி செல்வராஜை பிடிக்க, தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்