இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை பாதுகாக்க கருவி - புது கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்

இயற்கை சீற்றங்களில் சிக்கி பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக புதிய கருவியை சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

Update: 2019-01-05 18:41 GMT
இயற்கை சீற்றங்களில் சிக்கி பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக புதிய கருவியை சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.  சென்னை புதுவண்ணாரப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் வில்சன் என்ற மாணவன், இந்த கருவியை கண்டுபிடித்துள்ளார். மாணவன் வில்சன், இந்த கருவியை கண்டுபிடித்துள்ளார். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான இந்த கருவியானது மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. மீனவர்கள் கடலில் எந்த இடத்தில் எந்த பகுதியில் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக தரும் இந்த கருவியானது மீனவர்களுக்கு மட்டுமின்றி கடலோர காவல்படைக்கும் பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்