இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் விவகாரம் : ஜன. 10 வரை அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட, ஜனவரி 10 ம் தேதி வரை, அவகாசம் வழங்கி, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-28 16:06 GMT
இறுதி வாக்காளர் பட்டியலை  வெளியிட, ஜனவரி 10 ம் தேதி வரை, அவகாசம் வழங்கி,  தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சுமார் 10 லட்சம் வாக்காளர்கள் இரண்டு, அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான கால அவகாசம் தேவை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு எழுதிய கடிதத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கி,  கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்