"பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும் தடை ஏற்படுகிறது" - நாராயணசாமி

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2018-12-26 10:02 GMT
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு உயிரிழந்தவர்களைப் போல அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பங்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, நீலப்புரட்சி எனும் திட்டத்தை கொண்டு வந்து மீனவர்களின் திட்டங்களை முடக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்