கிறிஸ்துமஸ் கோலாகலம் : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கிருஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் களைகட்டத்துவங்கியுள்ளது.

Update: 2018-12-25 04:24 GMT
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 -ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  தமிழக தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி   பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஏசு கிறிஸ்து பூவுலகில் பிறந்த செய்தியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் வாசித்தார்.

அதேபோல், 166 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறிஸ்தவ பேராலயமான மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.அப்போது இயேசு கிறிஸ்துவின் திரு உருவ பொம்மைக்கு ஆராதனை செய்து, பொதுமக்களுக்கு பேராயர்கள் கிறிஸ்துமஸ் ஆசி வழங்கினார்கள்.

அதேபோல் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கல் ஆலயத்தில் கிருஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்


Tags:    

மேலும் செய்திகள்