டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை

சேலத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை..

Update: 2018-12-19 07:41 GMT
சேலம் மாநகரில் இயங்கி வரும் 46 மதுபானக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறைந்த விலை கொண்ட மது வகைகளுக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரையிலும், அதிகப்படியான விலை கொண்ட மது வகைகளுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் மது விரும்பிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டால், அதிக விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் அறிவுறுத்துவதாக தெரிவிக்கின்றனர். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மது பிரியர்களின் கோரிக்கையாகும்
Tags:    

மேலும் செய்திகள்