ஜெயலலிதா மரணம் : விஜயபாஸ்கர், பொன்னையன் நாளை ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஆகியோர் நாளை ஆஜராக உள்ளனர்.

Update: 2018-12-17 13:01 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும், ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய முன்னாள் அமைச்சர் பொன்னையன் நாளை ஆஜராகிறார். இதேபோல்,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆணையத்தில் நாளை ஆஜராகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களின் மருத்துவம் சார்ந்த முடிவுகள், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் இருந்ததா? இல்லையா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   
Tags:    

மேலும் செய்திகள்