சேவல் சண்டை நடத்த அனுமதி வேண்டும் - சேவல் வளர்ப்போர் தமிழக அரசுக்கு கோரிக்கை

பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் சேவல் வளர்ப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-16 08:18 GMT
ஜல்லிக்கட்டு போட்டியை போல, சேவல் சண்டைக்கும் அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் சண்டை சேவலை வளர்த்து வருகின்றனர். பாதாம், முந்திரி உள்ளிட்ட சத்தான பருப்புகளை கொடுத்து வளர்க்கப்படும் சண்டை சேவல்களுக்கு, நடை பயிற்சி, சண்டை பயிற்சி ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் சேவல் வளர்ப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்