மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் கத்தியால் குத்த முயன்ற கணவன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-12-07 13:57 GMT
ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், அவரது மனைவி கவிதா. கவிதா பணிக்கு செல்வதை விரும்பாத கணவர் ராமச்சந்திரன், அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் கவிதா பணிபுரியும் இடத்திற்கு சென்ற ராமச்சந்திரன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ராமசந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை கொலை செய்ய முயன்றுள்ளார். இச்சம்பவத்தை அதிர்ச்சியுடன் பார்த்த பொதுமக்கள் ராமசந்திரனிடம் இருந்த கத்தியை பிடுங்கி விட்டு தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்