வள்ளுவர் கோட்டம் - போராட்டங்களுக்கு தடை கோரிய வழக்கு : சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஜனவரி 4 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மற்றும் , காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-05 02:53 GMT
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஜனவரி 4 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மற்றும் , காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் போராட்டங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிட்டப்பட்டது. போராட்டங்கள் நடத்த, 16 நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும்,  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே  போராட்டங்களுக்கு  அனுமதி வழங்கப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்கும்படி மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்