பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் - ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த, ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

Update: 2018-12-04 22:15 GMT
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த, ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. ஒப்பந்தத்தில் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றும், ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக்கோரியும் மதுரை பாரதியார் வணிக வளாக சங்க செயலாளர் கருப்பாண்டி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, தாரணி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தனர். கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் வழங்கிய நோட்டீசிற்கு விதித்த இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்