"ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் பேச வேண்டும்" - தினகரன்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2018-12-02 08:51 GMT
திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக நடந்துகொண்டதாக அந்த அமைப்பினர் கூறியிருப்பதாகவும், இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்