பரதம் ஆடி ஏழைக் குழந்தைகளுக்கு உதவிய மாணவி : நெகிழ வைக்கும் மனிதநேயம்

ஓசூரில் பரதம் ஆடிய பள்ளி மாணவி, அதன் மூலம் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.

Update: 2018-12-01 08:36 GMT
ஓசூரில் பரதம் ஆடிய பள்ளி மாணவி, அதன் மூலம் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். ஓசூர் காமாட்சியம்மன் கோவிலில் நிகாரிகா என்ற மாணவியின் பரத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கிடைத்த வருமானத்தை மாணவி நிகாரிகா, பெங்களூருவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இது மட்டுமில்லாமல், நிகழ்ச்சியின்போது மாணவி, தான் வரைந்த ஓவியங்களையும் விற்று, அந்த பணத்தையும் ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்கினார். மாணவியின் செயலை கண்டு வியந்த அப்பகுதி மக்கள், வெகுவாக பாராட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்