சென்னை வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது : ரூ.35.90 லட்சம் பறிமுதல்

சென்னை பர்மா பஜாரில் ரபீக் என்பவரிடம் 10லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

Update: 2018-12-01 08:11 GMT
சென்னை பர்மா பஜாரில் ரபீக் என்பவரிடம் 10 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மீட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்து சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் 53 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தது தெரிந்தது. இதையடுத்து முத்து சரவணனிடம் 35 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கைப்பற்றிய போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்