டிடிவி தினகரன் வாகனத்தை மறித்து உணவு கேட்ட கிராம மக்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வழியில் தெலுங்கன் குடிகாடு என்ற இடத்தில், அமமுக துணைப் பொதுசெயலாளர் தினகரன் வாகனத்தை பொதுமக்கள் மறித்து உணவு கேட்டனர்.

Update: 2018-11-25 13:58 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு  நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வழியில் தெலுங்கன் குடிகாடு என்ற இடத்தில், அமமுக துணைப் பொதுசெயலாளர் தினகரன் வாகனத்தை பொதுமக்கள் மறித்து உணவு கேட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய மூட்டையை அவரது உதவியாளர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினால்தான் மக்கள் அமைதியாவார்கள் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்